கோவில்பட்டி அருகே10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு:போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

10-ம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடத்தி பாலியல் தொந்தரவு

விசாரணையில், மாணவியை கோவில்பட்டி அருகே குமாரகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலகிருஷ்ணன் (வயது 24) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அங்கு சென்று பாலகிருஷ்ணனை பிடித்து, மாணவியை மீட்டனர். மேலும் அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதையடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பாலகிருஷ்ணனை கைது செய்தார்.

பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

----------


Next Story