கடலூர் முதுநகர் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கடலூர் முதுநகர் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அரசன் மகன் பிரேம்குமார் (வயது 18). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய தந்தை அரசன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரேம்குமார் சேடப்பாளையம் வீரன் கோவில் அருகே உள்ள ஒரு வேப்பமரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story