திருக்கோவிலூர் அருகே பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திருக்கோவிலூர் அருகே  பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

திருக்கோவிலூர் அருகே பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் நகர மன்ற துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கதிர்வேல் தலைமையிலான விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story