டி.என்.பாளையம் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை


டி.என்.பாளையம் அருகே   குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை
x

டிரைவர் தற்கொலை

ஈரோடு

டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மொசல்மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 38). இவர் டிராக்டர் டிரைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவி உள்ளார்.மாதேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்துவிட்டு் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே கடந்த 8-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாதேஸ் விஷத்தை குடித்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு் சிகிச்சைக்காக கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, மாதேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story