தூத்துக்குடி அருகேபெண் உடல் மீட்பு


தூத்துக்குடி அருகேபெண் உடல் மீட்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் யார்? இறந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் காய்ந்த நிலையில் கிடந்தது. உடல் உறுப்புகளை நாய் கடித்த நிலையில் ஆங்காங்கே எலும்பு கூடுகளும் கிடந்தன. இந்த பெண் இறந்து 15 நாட்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு கூடாக கிடந்த உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? இறந்தது எப்படி?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story