உளுந்தூர்பேட்டை அருகே 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே  3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர் கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த மினிலாரியை போலீசார் மறித்து அதனை சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மயில்சாமி(வயது 39) என்பதும், ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மயில்சாமியை கைது செய்த போலீசார், 3½ டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story