நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

ேசாழவந்தான் அருகே நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே நெட்டுக்குளம் கிராமத்தில் உள்ள நீதிவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருவேடகம் பாலகிருஷ்ணன் கோபாலசாமி தலைமையில் யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்து மகாபூர்ணாகுதி நடைபெற்றது. இதை தொடர்ந்து மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.பின்னர் கோபுர கலசத்தில் பூஜைகள் செய்து மகாகும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story