நெல்லை: சைக்கிள் மீது மோதி விபத்து - பைக்கில் வந்தவர் உயிரிழப்பு


நெல்லை: சைக்கிள் மீது மோதி விபத்து - பைக்கில் வந்தவர் உயிரிழப்பு
x

களக்காடு அருகே பைக்கும் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதில் பைக்கில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

திருநெல்வேலி


நெல்லை மாவட்டம்,களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் அண்ணத்துரை.இவரது மகன் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் சைக்கிளில் வந்துள்ளார்.

இந்நிலையில் சைக்கிளும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அருகிலிருந்தார்கள் அவர்களை மீட்டு வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

முத்துக்குட்டி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story