சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி புதுப்பெண் பலி


சிங்காரப்பேட்டை அருகே  ஏரியில் மூழ்கி புதுப்பெண் பலி
x

சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி புதுப்பெண் பலியானார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி சுஜாதா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந் தநிலையில் சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரங்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு சுஜாதா சென்றார். கடந்த 3-ந் தேதி அங்குள்ள ஏரிக்கு அவர் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஏரியில் மூழ்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 10 மாதத்தில் புதுப்பெண் ஏரியில் மூழ்கி இறந்தது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரித்து வருகிறார்.


Next Story