வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி


வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
x
தினத்தந்தி 17 May 2023 7:06 AM GMT (Updated: 17 May 2023 7:06 AM GMT)

வைகாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story