செவிலியர்கள் போராட்டம்


செவிலியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது பணிப்பளுவை குறைக்க வேண்டும். பதிவேடுகளை அரசே தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கவுரவ ஆலோசகர் ஜான்சி ராணி, மாநில இணை செயலாளர்கள் சுகந்தி முத்துமாரி, மாவட்ட தலைவர்கள் வள்ளியம்மாள், முத்தானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story