நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

குடியாத்தத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொல செய்து கொண்டார். போராசிரியர்கள் டார்ச்சர் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டி

வேலூர்

குடியாத்தத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொல செய்து கொண்டார். போராசிரியர்கள் டார்ச்சர் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

டார்ச்சர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் காமாட்சியம்மன் பேட்டை காமாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். நகை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 21). ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுகுறித்து கார்த்திகாதேவி, தனது பெற்றோருக்கு போன் செய்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சென்று கார்த்திகாதேவியை குடியாத்தத்திற்கு அழைத்து வந்து விட்டனர். இந்தநிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டதும் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு கார்த்திகாதேவியை குடியாத்த அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் கார்த்திகா தேவியை பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவுப் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சிங் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக மாணவி கார்த்திகா தேவிக்கு கல்லூரியில் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்த துறை தலைவர், பேராசிரியர்கள் மீது சித்தூர் மாவட்ட காவல் துறையிலும், நர்சிங் கல்லூரி அமைந்துள்ள தவனம்பல்லி போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்க மாணவியன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story