பெண்ணிடம் ஆபாச பேச்சு; வாலிபர் சிக்கினார்


பெண்ணிடம் ஆபாச பேச்சு; வாலிபர் சிக்கினார்
x

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் சிக்கினார்.

மதுரை


மதுரை வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் விஜயராகவன் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரை அடிக்கடி கேலியும், கிண்டலும் செய்தாராம். சம்பவத்தன்று வீட்டில் அந்த பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு விஜயராகவன் அங்கு சென்று அவரிடம் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story