ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பயணிகளின்மடிக்கணினிகளை திருடிய கேரள முதியவர் கைது


ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பயணிகளின்மடிக்கணினிகளை திருடிய கேரள முதியவர் கைது
x

ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பயணிகளின் மடிக்கணினிகளை திருடிய கேரள முதியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


பாண்டிச்சேரி நாயனார் மண்டபம் ஈஸ்ட்கோஸ்ட்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஹரிஷ் ராகவன் (வயது 21). மதுரை வந்திருந்த இவர் சேலம் செல்வதற்காக ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பஸ்சில் அவர் அமர்ந்திருந்தபோது அவருடைய பையை காணவில்லை. அதில் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (29) ஊருக்கு செல்வதற்காக ஆரப்பாளையம் பஸ்நிலையம் வந்திருந்தார். அவரும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அவரது பையை காணவில்லை. அதில் மடிக்கணினி, அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் முதியவர் ஒருவர் பயணி போல் அமர்ந்து பையை திருடி செல்வதை கண்டு பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கென்றிவிக்டர் (66) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். கோவை இடிக்கரை மணியக்கார பாளையத்தை சேர்ந்தவர் லதா (23). சம்பவத்தன்று இவர் திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் மடிக்கணினி வைத்திருந்தார். இது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையம் பஸ்நிலையத்தில் மடிக்கணினி திருடியவரிடம் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story