மூதாட்டி பிணம்


மூதாட்டி பிணம்
x

சேரன்மாதேவி அருகே மூதாட்டி பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த கங்கணாங்குளம் அருகே உள்ள சடையப்புரத்தில், இடையான்குளத்தைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அப்பகுதியினர் சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story