கால்வாயில் பிணமாக மிதந்த மூதாட்டி


கால்வாயில் பிணமாக மிதந்த மூதாட்டி
x

கன்னடியன் கால்வாயில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கல்லிடைக்குறிச்சி கன்னடியன் கால்வாயில் பெண் பிணம் மிதப்பதாக கல்லடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பிணத்தை போலீசார் பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம் தெருவை சேர்ந்த தர்மாம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story