விபத்தில் மூதாட்டி பலி


விபத்தில் மூதாட்டி பலி
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:45 PM GMT)

புளியங்குடியில் நடந்த சாலை விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

புளியங்குடி மின்சார வாரிய அலுவலகம் அருகே தினசரி எலுமிச்சை மார்க்கெட் முன்பு நேற்று முன்தினம் 65 வயது மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டையில் இருந்து சாத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி ஆகியோர் அங்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story