லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது


லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2023 8:15 PM GMT (Updated: 11 Aug 2023 8:15 PM GMT)

பெரியகுளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசியா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளுவர் சிலை அருகே அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் வயது 75) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவரிடம் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story