செங்கல் திருடிய முதியவர் கைது

செங்கல் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
நெல்லையை அடுத்த பழைய பேட்டை கண்டியபேரி கணேசன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61). இவர் புதிய வீடு கட்டுவதற்காக, தனது வீட்டின் அருகில் செங்கல்களை அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த செல்லையா (60) மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று நைசாக 45 செங்கல்களை திருடிச் சென்றார். உடனே தங்கராஜ் உள்ளிட்டவர்கள் செல்லையாவை கையும் களவுமாக பிடித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





