சரக்கு வேன் மோதி முதியவர் பலி


சரக்கு வேன் மோதி முதியவர் பலி
x

திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள பெரியப்பாலிப்பட்டு கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 74).

இவர் இன்று காலை சைக்கிளில் செங்கம் சாலையில் உள்ள கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு வேன் அண்ணாமலை மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story