ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
x

பழனி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த சத்திரப்பட்டி ரெயில்வே கேட் அருகில் தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது உடல் 2 துண்டான நிலையில் 60 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். விசாரணையில் நேற்று முன்தினம் மாலையில் தண்டவாளத்தை கடந்தபோது, மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story