மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

செட்டிக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

தென்காசி மாவட்டம் மேலநாலாந்துலா கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 61). இவர் உடல்நிலை சரியில்லாமல் கோவில்பட்டி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செட்டிகுறிச்சி அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பையாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சுப்பையாவுக்கு வேலம்மாள் என்ற மனைவியும், முருகேஸ்வரி, மாரியம்மாள் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story