மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

புதுக்கோட்டை

செம்பட்டிவிடுதி அருகே வடவாளம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 60). இவர், மாங்கனம்பட்டி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த பரித்அலி மகன் கல்வெத்மொய்தீன் (39) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவி தமாக முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்தானம் மகன் வசந்த் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story