மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயம்
x

ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிமணி (வயது 66). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குளத்து வேலைக்கு சென்ற தனது மனைவி ராசாத்தியை (55) அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோதைசேரி பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது, ரோட்டின் குறுக்கே கன்று குட்டி வந்தது. இதைப்பார்த்த துளசிமணி கன்று குட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் துளசிமணி படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story