மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

பெரியகுளத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

பெரியகுளம், தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்தவர் வெள்ளை மணி. இவரது மனைவி சரசு (வயது 60). கடந்த 6 மாதமாக இவர் வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சரசு வலி தாங்க முடியாமல் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story