தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை


தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

அகஸ்தீஸ்வரம் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஏழு சாட்டுபத்தை சேர்ந்தவர் சுயம்பு லெட்சுமி (வயது 68). இவருடைய கணவர் தங்க பாண்டியன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகனின் பெயர் கங்காதரன் (37). அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கங்காதரனும், சுயம்புலெட்சுமியும் ஒரு வீட்டில் வசித்தனர். இதற்கிடையே நோயினால் சுயம்புலெட்சுமி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காலை கங்காதரன் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய போது சுயம்புலெட்சுமி சமையல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story