கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டுதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டுதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற தனியார் துறை 27-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருவண்ணாமலை

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story