புலிகள் தினத்தையொட்டிவிழிப்புணர்வு ஊர்வலம்


புலிகள் தினத்தையொட்டிவிழிப்புணர்வு ஊர்வலம்
x

புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

புலிகள் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு சத்தியமங்கலம் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஐமன் ஜமால் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோபி ரோட்டில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் வனவர் பழனிச்சாமி, சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன் உள்பட வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story