குறிஞ்சிப்பாடி அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை


குறிஞ்சிப்பாடி அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்


குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரோட்டு பொட்டவெளியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சஞ்சய் என்கிற சாம்ராஜ் (வயது 20). இவர் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகர், தனது மகனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சாம்ராஜ், விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாம்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story