ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும்


ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும்
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:46 PM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது,

ஒரே நாடு ஒரே தேர்தல்

டெல்லியில் ஜி.20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனகார்கேவுக்கு மாநாட்டையொட்டி நடைபெற உள்ள விருந்திற்கு அழைக்காதது வருத்தம் அளிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை தேவை உள்ள நிலையில் கனவாகவே நீடிக்கும்.

மக்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த அவ்வப்போது வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வாய்ப்பளிப்பது என்பது ஏற்புடையதல்ல.

இந்தியா கூட்டணி

வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்று வதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா பாரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வு

இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story