ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்


ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சந்தியா தீபாராதனை, பிரசாத சுத்தி, அஸ்திர கலசபூஜை, அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பிரம்ம கலச பூஜை, பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 11.20 முதல் 12 மணிக்குள் நடக்கிறது. இதில் கேரள மாநிலம் தீயன்னூர் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றம் அத்தாழ பூஜையும் நடக்கின்றன. நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை தினமும் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story