மக்கள் குறைதீர்வு நாளில் 8 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை


மக்கள் குறைதீர்வு நாளில் 8 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை
x

மக்கள் குைற தீர்வு நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

208 மனுக்கள் ெபறப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டன.

உதவித்தொகை

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்ேகற்று பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு தகுதியான 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

கூட்டத்தில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை ஆட்சியர்கள் சத்ய பிரசாத், தாரகேஸ்வரி, இளவரசி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story