தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). தொழிலாளி. இவருக்கும், நர்மதா என்ற பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 மாதங்களாக சரவணன் தனது மனைவி நர்மதாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்ததற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story