மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் சாவு
x

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் இறந்தார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கணேசமூர்த்தி (வயது 32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந் தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Next Story