கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி
x

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

திருநெல்வேலி

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பல ஆயிரக்கணக்கான மண்பானை, கலயங்களில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வர்ணம் பூசப்பட்டு, கிருஷ்ணர், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த பானை மற்றும் கலயங்களுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


Next Story