புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்


புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்
x

புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னதாக தமிழ்த்துறை தலைவர் சசிகுமார் வரவேற்று பேசினார். மற்ற துறை தலைவர்கள் குமார், பிரியா, சாந்தி, நூலகர் சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் திருநாராயணசாமி நன்றி கூறினார்.


Next Story