பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x

பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து தாலுகாவிலும் கிராமங்களில் நடக்கிறது.

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி அவினாசி தாலுகாவில் நடுவச்சேரி கிராமம், தாராபுரம் தாலுகாவில் கெத்தல்ரேவ் கிராமம், காங்கயம் தாலுகாவில் ஆரத்தொழுவு கிராமம், மடத்துக்குளம் தாலுகாவில் கணியூர் கிராமம், பல்லடம் தாலுகாவில் எலவந்தி கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் வேலம்பட்டி கிராமம், உடுமலை தாலுகாவில் தொட்டம்பட்டி கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் குன்னத்தூர் கிராமம் ஆகியவற்றில் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

பெயர் சேர்த்தல்

திருப்பூர் வடக்கு தாலுகாவில் வடக்கு கிராமத்துக்கு நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முகாம் நடக்கிறது. அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உள்ளனர்.

பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், ஸ்மார்ட் கார்டு போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----


Related Tags :
Next Story