லாரிகள், கார் பறிமுதல்; ரூ.3 லட்சம் அபராதம்


லாரிகள், கார் பறிமுதல்; ரூ.3 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

பாலக்கோடு பகுதியில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 லாரிகள், கார் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 லாரிகள், கார் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, தர்மபுரி செயலாக்க பிரிவு ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு பை-பாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பயணிகளை ஏற்றி வந்த காரை நிறுத்தி அலுவலர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது உரிய அனுமதியின்றி தீப்பெட்டி நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி செல்ல கார் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அதேபோன்று உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.3 லட்சம் அபராதம்

இதையடுத்து அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களுக்கும் ரூ.3 லட்சம் அலுவலர்கள் அபராதம் விதித்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும். உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story