15 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி


15 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 12 Aug 2022 8:57 AM GMT (Updated: 12 Aug 2022 8:58 AM GMT)

நீர்வரத்து சீரானதால் 15 நாட்களுக்கு பிறகு பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து நீர்வரத்து காணப்படும்.

இந்த அருவிக்கு கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று நீர்வரத்து சீராக வந்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 15 நாட்களுக்கு பிறகு அனுமதி அளித்தனர். இருப்பினும் திடீர் அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த அளவே இருந்தது.


Next Story