காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்


காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்
x

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திரண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி 32-வது வார்டில் பேராங்குளம் பகுதியில் ஆழ்குழாய் மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுவதில், கடந்த 2 மாதங்களாக மோட்டார் பழுதாகி இருந்துள்ளது. இதனால் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களில் ஒரு தரப்பினர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் தண்ணீர் வராதது குறித்து தெரிவிக்க காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சிலர் அந்த குடிநீர் தொட்டி முன்பு திரண்டனர்.

மேலும் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பொதுமக்களில் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். மோட்டார் பழுது சரி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் காலிக்குடங்களுடன் வந்து போராட்டம் நடத்த முயல்வதா? என்று கூறி அங்கிருந்த பொதுமக்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர். இதற்கிடையே மோட்டார் பழுது சரி செய்யும் பணிக்காக உடனடியாக நகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story