உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யும் அரும்பணியில் இணைய வேண்டும்


உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யும் அரும்பணியில் இணைய வேண்டும்
x

உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யும் அரும்பணியில் இணைய வேண்டும் -கமல்ஹாசன் வேண்டுகோள்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல் ரத்ததான குழு உருவாக்கி உள்ளோம். இதன்மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.

9150208889 என்ற பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்தந்த பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு துரிதமாக உதவ முடியும்.

ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும் இந்த எண்ணை அழைத்து தங்களை பதிவு செய்யலாம். ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரத்த தானம் செய்பவர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவை தொடங்கி ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story