கடும் குளிரால் பொதுமக்கள் அவதி


கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)

குன்னூரில் உறைபனி அதிகரிப்பால், கடும் குளிரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நீலகிரி

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக தொடங்கியது.

இதற்கிடையே குன்னூர் பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அதிகளவு மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக குன்னூர் பகுதியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. குன்னூர் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும் கடும் குளிர் காரணமாக ெபாதுமக்்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது. இந்தநிலையில் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நேற்று 9.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.


Next Story