மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 22 May 2023 6:45 PM GMT (Updated: 22 May 2023 6:46 PM GMT)

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 115 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தொடுதிரை கைபேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story