பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

நச்சலூர்,

குளித்தலை வட்டம், நெய்தலூர் ஊராட்சி பெரியபனையூரில் பிரசித்தி பெற்ற பெரியக்காண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், முருகன், மதுரை வீரன் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களும் உள்ளன. இந்தநிலையில் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பெரியக்காண்டியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Next Story