சமூக நீதிக்கான பெரியார் விருது


சமூக நீதிக்கான பெரியார் விருது
x
தினத்தந்தி 11 Sep 2022 7:00 PM GMT (Updated: 11 Sep 2022 7:00 PM GMT)

சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் விருது

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

2022-ம் ஆண்டிற்கானதமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை கிருஷ்ணகிரி கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

அடுத்த மாதம் 31-ந் தேதி

விணண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்வி தகுதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு/சமூக சீர்த்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு, பிற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியயதாக இருத்தல்வேண்டும்.

2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story