இரை தேடி வந்தபோது பரிதாபம்: பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பலி


இரை தேடி வந்தபோது பரிதாபம்:  பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பலி
x

கடமலைக்குண்டு அருகே இரை தேடி வந்தபோது பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை இறந்தது

தேனி

மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட அரசரடி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டெருமை ஒன்று உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதைக்கண்ட வனத்துறையினர், மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கால்நடை டாக்டர் வெயிலான் வரவழைக்கப்பட்டார். பின்னர் அவரது தலைமையிலான மருத்துவ குழுவினர், காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டது. இரை தேடி வந்தபோது பாறையில் வழுக்கி விழுந்து காயமடைந்ததில் காட்டெருமை பரிதாபமாக இறந்திருக்கலாம் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.


Next Story