கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவி


கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவி
x

ஆரணி அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மகள் ஹரிப்பிரியா (வயது 16). இவர், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஆகாரம் கிராமத்தில் ஜெகதீசன் என்பவருடைய விவசாய கிணற்றில் ஹரிப்பிரியா பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி காணாமல் போன வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மாணவி ஹரிப்பிரியா ஏன் இறந்தார், காதல் தோல்வியா, பள்ளி தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தாலா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story