விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

நெமிலி அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் வேளாளர் தெருவை சேர்ந்த பச்சையப்பன் மகன் நீலகண்டன் (வயது 34), விவசாய கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம்பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story