கல்குவாரி குட்டையில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை


கல்குவாரி குட்டையில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை
x

வேட்டவலம் அருகே போலீஸ்காரர் ஒருவர் கடன் தொல்லையால் கல் குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தார்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே போலீஸ்காரர் ஒருவர் கடன் தொல்லையால் கல் குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தார்.

போலீஸ்காரர்

வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தமிழ்அமுதன் (2) என்ற மகன் உள்ளான்.

பிரசாந்த்துக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. மேலும் குடும்ப பிரச்சினையாலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ்காரர் பிரசாந்த், வீட்டின் அருகே உள்ள ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றார்.

அங்கு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போலீஸ்காரர் பிரசாந்த் குதித்த கல் குவாரி குட்டையில் இறங்கி அவரை தேடினர்.

சில மணி நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி, வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story