இருளப்பசாமி கோவிலில் பொங்கல் விழா


இருளப்பசாமி கோவிலில் பொங்கல் விழா
x

இருளப்பசாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

கீழராஜகுலராமன் இருளப்பசாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கீழராஜகுலராமன் வடக்கத்தியம்மன் கோவிலிலும் பொங்கல் விழா நடைபெற்றது.


Next Story